வரும் 26ம் தேதி கோவை மண்டல டாஸ்மாக் கூட்டுக்குழு சார்பில் பொது வேலை நிறுத்தம்!

கோவை: கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் கோவை மண்டலம் சார்பில் பொது வேலை நிறுத்த ஆய்வுக்கூடம் நடைபெற்றது.



கோவை: கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் கோவை மண்டலம் சார்பில் பொது வேலை நிறுத்த ஆய்வுக்கூடம் நடைபெற்றது.



இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் வருகின்ற 26ம் தேதி அனைத்து தொழிற்சங்களின் சார்பில் வேலை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாகவும் வேலை நிறுத்தம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச மாநில பொதுச் செயலாளர் சிவபிரகாசம், இந்த கூட்டம் மத்திய அரசினுடைய தொழிலாளர் விரோத போக்கு, மக்கள் விரோத போக்கு, விவசாய விரோத போக்கினை கண்டித்தும், அதேபோல் டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிறது என்று கூறினார்.



டாஸ்மாக் சங்கங்கள் பலமுறை பணியாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்தும் கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து வருகின்ற 26ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது நடைபெற்று வரும் இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசு, டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளையும் அதே போல இடர்பாடுகளை இந்த நிர்வாகம் சரிசெய்து தர வேண்டும் என கோரிக்கையை வைத்தவர், 20% போனஸை 10% மாக மாற்றியதை 50% மாக வழங்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...