கோவையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம் ஆக உயர்வு!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 45 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 45 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது.

அதன்படி, நேற்று கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மொத்தம் 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கோரோணா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 187 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 117 ஆக உள்ளது.

மேலும், கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ தனியார் மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் மொத்தம் 883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, நேற்று கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...