பொள்ளாச்சி: தமிழகத்தில் சீட்டாட்டம் உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் தொடர்ந்து சீட்டாட்டம், சேவல் சண்டை உள்ளிட்ட சூதாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.
பொள்ளாச்சி: தமிழகத்தில் சீட்டாட்டம் உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் தொடர்ந்து சீட்டாட்டம், சேவல் சண்டை உள்ளிட்ட சூதாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள தேவம்பாடி வலசு கிராமத்தில், நேற்று இரவு சிலர் சீட்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக, வடக்கிபாளையம் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாதுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி(41), பாலசுப்ரமணியம்(46), வெங்கடேஷ்(40), சரவணகுமார்(25), கார்த்திக்(24), அசோக்(30) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பின் காவல்நிலைய பிணையில் விடுவித்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ரூ.10,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள தேவம்பாடி வலசு கிராமத்தில், நேற்று இரவு சிலர் சீட்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக, வடக்கிபாளையம் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாதுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி(41), பாலசுப்ரமணியம்(46), வெங்கடேஷ்(40), சரவணகுமார்(25), கார்த்திக்(24), அசோக்(30) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பின் காவல்நிலைய பிணையில் விடுவித்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ரூ.10,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.