கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மலுமிச்சம்பட்டி அன்பு நகர் குடியிருப்பு 8-வது பிளாக் பகுதியில் செல்வராஜ் என்பவருடைய மகன் முருகவேல் (19) குடியிருந்து வருகிறார். இவர் நேற்று மாலை செட்டிபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கஞ்சா பொட்டலங்களை மஞ்சப் பையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பிறகு அவர் மீது என்.டி.பி.எஸ் ஆக்ட் இன் பிரகாரம் வழக்குப்பதிவு செய்து இன்று சிறையில் அடைத்தனர்.