திருப்பூர்: திருப்பூரில் காவல்துறை வாகன சோதனையின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 530 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் காவல்துறை வாகன சோதனையின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 530 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு காவல் துறைக்குட்பட்ட ராயபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஆட்டோவை சோதனை செய்தனர்.

இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 530 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தங்கராஜ் மற்றும் மதன் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், புகையிலைப் பொருட்களை கொண்டு வந்த ஆட்டோவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் வடக்கு காவல் துறைக்குட்பட்ட ராயபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஆட்டோவை சோதனை செய்தனர்.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 530 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தங்கராஜ் மற்றும் மதன் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், புகையிலைப் பொருட்களை கொண்டு வந்த ஆட்டோவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.