கோவையில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..! படுகாயங்களுடன் மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை!

கோவை: கோவையில் இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மற்றொரு நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கோவையில் இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மற்றொரு நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையம் சங்கர் லே அவுட்டை சேர்ந்தவர் அஞ்சப்பர். இவர் அரசு போக்குவரத்து துறையில் ஆய்வாளராக உள்ளார். இவருடைய மகன் ஆதித்யா விக்னேஸ்வரன் (22), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விஜய் (20). நண்பர்களான இவர்கள் 2 பேரும் துடியலூரிருந்து கணவாயில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் நேற்று சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜய் ஓட்டினார்.

இந்த நிலையில், அங்குள்ள ஒரு வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆதித்யா விக்னேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

மேலும், விஜய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...