கோவை: கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (37) ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது நண்பர் பாலக்காட்டைச் சேர்ந்த சபரி (28), இருவரும் ரியல் எஸ்டேட் அதிபர்கள். சபரி கண்ணூரில் உள்ள ரெஜீசை தொடர்பு கொண்டு கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் குறைந்த விலைக்கு நிலம் விற்பனைக்கு உள்ளது. இருவரும் சேர்ந்து அந்த இடத்தை பார்ப்போம் என்று அழைத்துள்ளார்.
அதன்படி, சபரி ஆகியோர் தனது நண்பர் நிசார் (38), என்பவருடன் நேற்று முன்தினம் மாலை காரில் பெரியநாயக்கன்பாளையத்தில் அடுத்துள்ள அங்காலம்மாள் புரம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு வந்தனர்.
அப்போது, திடீரென்று சபரி கத்தியை காட்டி ரெஜிஸ் மற்றும் அவரது நண்பர் நிஷாரை மிரட்டி பணம் நகையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் வந்த காரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதனை தொடர்ந்து, சபரி காரை திருடிச் சென்று விட்டார். இது குறித்து ரெஜிசும், நிஷாரும் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சபரியை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (37) ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது நண்பர் பாலக்காட்டைச் சேர்ந்த சபரி (28), இருவரும் ரியல் எஸ்டேட் அதிபர்கள். சபரி கண்ணூரில் உள்ள ரெஜீசை தொடர்பு கொண்டு கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் குறைந்த விலைக்கு நிலம் விற்பனைக்கு உள்ளது. இருவரும் சேர்ந்து அந்த இடத்தை பார்ப்போம் என்று அழைத்துள்ளார்.
அதன்படி, சபரி ஆகியோர் தனது நண்பர் நிசார் (38), என்பவருடன் நேற்று முன்தினம் மாலை காரில் பெரியநாயக்கன்பாளையத்தில் அடுத்துள்ள அங்காலம்மாள் புரம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு வந்தனர்.
அப்போது, திடீரென்று சபரி கத்தியை காட்டி ரெஜிஸ் மற்றும் அவரது நண்பர் நிஷாரை மிரட்டி பணம் நகையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் வந்த காரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதனை தொடர்ந்து, சபரி காரை திருடிச் சென்று விட்டார். இது குறித்து ரெஜிசும், நிஷாரும் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சபரியை கைது செய்தனர்.