பொள்ளாச்சி: வடக்கிபாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பெண் ஊழியரிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி: வடக்கிபாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் பெண் ஊழியரிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவர் கோவை - வடக்கிபாளையம் ரோடு பிரிவு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்துள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று கனகராஜ் மற்றும் அவரது உறவினர் காலிங்கராஜ் ஆகிய இருவரும் பெட்ரோல் பங்கில் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட பெட்ரோல் பங்க் காசாளர் வினோதாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, பெண் காசாளர் பொள்ளாச்சி தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காலிங்கராஜ் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவர் கோவை - வடக்கிபாளையம் ரோடு பிரிவு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்துள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று கனகராஜ் மற்றும் அவரது உறவினர் காலிங்கராஜ் ஆகிய இருவரும் பெட்ரோல் பங்கில் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட பெட்ரோல் பங்க் காசாளர் வினோதாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, பெண் காசாளர் பொள்ளாச்சி தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காலிங்கராஜ் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.