கோவையில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்தி கட்டாய திருமணத்திற்கு முயற்சி வாலிபர் போக்சோவில் கைது

கோவை: கோவையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமண ஆசை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து போக்சோவில் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமண ஆசை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து போக்சோவில் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவி, கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, கடந்த 6- ஆம் தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். பதற்றம் அடைந்த, உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும், கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில், மாணவியை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி (22), என்ற வாலிபர் கடத்தி சென்று திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார், என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர்.

மேலும், சிறுமியை கடத்திய சஞ்சீவி மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...