கல்வி உதவித்தொகை கிடைக்காததால் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை: கல்வி உதவித்தொகை கிடைக்காததால் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: கல்வி உதவித்தொகை கிடைக்காததால் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆந்திர மாநிலத்தில் எல்.எஸ்.ஆர் கல்லூரியில் பயின்று வரும் ஐஸ்வர்யா என்ற மாணவி கல்வி உதவித் தொகை கிடைக்காத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.



இந்நிலையில், அந்த மாணவிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் எனவும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கல்வியால் மாணவர்களின் தற்கொலைகளை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவி ஐஸ்வர்யாவிற்கு நீதி வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் மாணவர்களின் கல்வி படிப்பில் அரசு வஞ்சிக்கக் கூடாது என்றும் முழக்கங்களை எழுப்பினர். 

மேலும், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகையில் உள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...