கோவை: கோவை மாநகராட்சியில் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குப்பை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியில் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குப்பை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் பீளமேடு உட்பட்ட பகுதிகளில் இன்று 11.11.2020 ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள், கோவை கொடீசியா வளாகத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் வாகனங்கள் மூலம் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளைக் கொட்டி குவிக்கப்பட்டிருந்ததை பார்வையிட்ட ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது,
கோவை மாநகராட்சியில் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த வாகனங்களை பறிமுதல் செய்யப்படும். அந்தந்த இடத்தின் உரிமையாளர்கள் குப்பைகளை கொட்டாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். தூய்மையான மாநகராட்சியாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து நல்கிட வேண்டுமென ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்.