கோவையில் சாலையோரம்‌ மற்றும்‌ பொது இடங்களில்‌ குப்பைகளை கொட்டுவோருக்கு அபராதம்‌..! குப்பை கொட்டும்‌ வாகனம் பறிமுதல்‌ - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கோவை: கோவை மாநகராட்சியில்‌ சாலையோரங்கள்‌ மற்றும்‌ பொது இடங்களில்‌ குப்பைகள்‌ மற்றும்‌ கட்டிடக்கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம்‌ விதிக்கப்பட்டு, குப்பை கொட்டும்‌ வாகனங்களை பறிமுதல்‌ செய்யப்படும்‌ என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில்‌ சாலையோரங்கள்‌ மற்றும்‌ பொது இடங்களில்‌ குப்பைகள்‌ மற்றும்‌ கட்டிடக்கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம்‌ விதிக்கப்பட்டு, குப்பை கொட்டும்‌ வாகனங்களை பறிமுதல்‌ செய்யப்படும்‌ என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார். 



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பீளமேடு உட்பட்ட பகுதிகளில்‌ இன்று 11.11.2020 ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, கோவை கொடீசியா வளாகத்திற்கு அருகாமையில்‌ உள்ள இடங்களில்‌ வாகனங்கள்‌ மூலம்‌ குப்பைகள்‌ மற்றும்‌ கட்டிடக்கழிவுகளைக்‌ கொட்டி குவிக்கப்பட்டிருந்ததை பார்வையிட்ட ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது, 

கோவை மாநகராட்சியில்‌ சாலையோரங்கள்‌ மற்றும்‌ பொது இடங்களில்‌ குப்பைகள்‌ மற்றும்‌ கட்டிடக்கழிவுகளைக்‌ கொண்டுவந்து கொட்டுவோருக்கு அபராதம்‌ விதிக்கப்படும்‌. மேலும்‌ அந்த வாகனங்களை பறிமுதல்‌ செய்யப்படும்‌. அந்தந்த இடத்தின்‌ உரிமையாளர்கள்‌ குப்பைகளை கொட்டாமல்‌ இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்‌. குப்பைகளை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத்‌ தொட்டிகளில்‌ மட்டுமே போட வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாக வைத்துக்கொள்ள பொதுமக்கள்‌ அனைவரும்‌ முழு ஒத்துழைப்பு தந்து நல்கிட வேண்டுமென ஆணையாளர்‌ அவர்கள்‌ தெரிவித்தார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...