திருமாவளவன், ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்களை ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்த அகில பாரத அனுமன் சேனா தலைவர் மீது வழக்குபதிவு

கோவை: பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பிரபு என்பவர் ஒரு புகார் மனு அளித்தார்.



கோவை: பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பிரபு என்பவர் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேளச்சேரியில் நடைபெற்ற அகில பாரத அனுமன் சேனா கூட்டத்தில், அதன் தலைவர் எஸ். வி. ஸ்ரீதர் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்களான திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஸ்டாலின், வைகோ, உள்ளிட்ட மேலும் பல தலைவர்களை ஆபாசமாக பேசியதோடு மட்டுமல்லாமல், திருமாவளவனை கொலை செய்வேன் என்றும் பேசியுள்ளார்.

இது தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பொது வெளியில் மிரட்டல் விடுத்த நபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் இன்று ஸ்ரீதர் கைது செய்யக் கோரி, அவர் வீடு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பொள்ளாச்சியில் பரபரப்பு நிலவியது.

இதனை தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், அகில பாரத அனுமன் சேனா தலைவர் எஸ்.வி.ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...