திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முதலாவது மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட வார்டு எண் 1 முதல் 15 வரை 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், சாலை விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், தெரு விளக்குகள் எரியாத சூழல் நிலவி வருவதாகவும் இது குறித்து பலமுறை மாநகராட்சி மற்றும் மண்டல நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மண்டல அலுவலக அதிகாரிகள் உடனடியாக கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முதலாவது மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட வார்டு எண் 1 முதல் 15 வரை 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், சாலை விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், தெரு விளக்குகள் எரியாத சூழல் நிலவி வருவதாகவும் இது குறித்து பலமுறை மாநகராட்சி மற்றும் மண்டல நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மண்டல அலுவலக அதிகாரிகள் உடனடியாக கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.