கோவையில் மோசடி வழக்கில் நிதி நிறுவன சொத்துக்கள் ஏலம்..! வரும் 19ம் தேதி மாவட்ட வருவாய் அதிகாரி முன்னிலையில் பொது ஏலம்!

கோவை: கோவையில் மோசடி வழக்கில் பொதுமக்களிடம் இருந்து பணங்களை பெற்று ஏமாற்றிய மோசடி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட்டு பறிமுதல் செய்யப்பட உள்ளது.


கோவை: கோவையில் மோசடி வழக்கில் பொதுமக்களிடம் இருந்து பணங்களை பெற்று ஏமாற்றிய மோசடி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட்டு பறிமுதல் செய்யப்பட உள்ளது.

இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டத்தின்படி மோசடி வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் சொத்துகள் ஏலம் விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன்படி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு சொந்தமான சுண்டக்காமுத்தூரில் உள்ள 1,950 சதுர அடி வீட்டு மனை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சொத்து வருகின்ற 19ம் தேதி பகல் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தகுதி பெற்ற அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...