வால்பாறையில் தேயிலை தோட்டத்தை முற்றுகையிட்ட காட்டு யானைகள்..! தோட்ட பணிகள் பாதிப்பு!

கோவை: வால்பாறையில் தேயிலை தோட்டத்தை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


கோவை: வால்பாறையில் தேயிலை தோட்டத்தை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 25,000 எக்டேர் பரப்பளவில் தேயிலைப் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் உலா வருகின்றன.

இந்நிலையில், 12க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வால்பாறை அடுத்த தாய் முடி தேயிலை தோட்டத்தில் 12ம் எண் காட்டில் தொடர்ந்து அங்கேயே நின்று முற்றுகையிட்டு உள்ளது.



இதனையடுத்து, வனத்துறையினர் தொடர்ந்து காட்டு யானைகளை விரட்டியும் அங்கிருந்து சென்றுவிட்டு மீண்டும் அங்கேயே வந்து நின்று கொண்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி தேயிலைத் தோட்டத்தில் உரமிடுதல், மருந்து அடித்தல், கொழுந்து பறித்தல் ஆகிய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது

இதனிடையே, தொழிலாளர்களுக்கு மாற்று இடத்தில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், தேயிலைத் தோட்ட காவலர்கள், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...