கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் உயர் கோபுரம் அமைப்பு

கோவை: நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், 100 அடி ரோடு, காந்திபுரம், உள்ளிட்ட கடை பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.



கோவை: நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், 100 அடி ரோடு, காந்திபுரம், உள்ளிட்ட கடை பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.



கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ள போதும், மக்கள் புது துணி, நகை மற்றும் இதர பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், மக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா? என்பதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.



இது தவிர வருவாய்த்துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை கடைபிடிக்க வாகனங்களில், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதையும் மீறி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது.



குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், குற்றச் சம்பவங்கள் மற்றும் திருடர்களை உயர் கோபுரம் அமைத்து அதன் மூலம் கண்காணிக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் என 50 பேர் காலை முதல் இரவு வரை சுழற்சிமுறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கடைவீதியில் பல்வேறு பகுதிகளில் உயர் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...