பொள்ளாச்சி: தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் 9, 10, 11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படும், என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
பொள்ளாச்சி: தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் 9, 10, 11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படும், என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அத்ரிப்பதியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இன்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து, பொள்ளாச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று காலை முதலே பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று தங்களது கருத்துக்களை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

அப்போது, பள்ளியில் வழங்கப்பட்ட கருத்துக்கேட்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் மீண்டும் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும், ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளை திறந்ததால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பதை சில பெற்றோர்கள் மேற்கோள் காட்டினர்.
மேலும், போதிய பேருந்து வசதி இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் பேருந்தில் கூட்டநெரிசலில் வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் நோய் தொற்று பெருகும் ஆபத்து உள்ளது, என்பதால் பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்றும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அத்ரிப்பதியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இன்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து, பொள்ளாச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று காலை முதலே பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று தங்களது கருத்துக்களை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

அப்போது, பள்ளியில் வழங்கப்பட்ட கருத்துக்கேட்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் மீண்டும் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும், ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளை திறந்ததால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பதை சில பெற்றோர்கள் மேற்கோள் காட்டினர்.
மேலும், போதிய பேருந்து வசதி இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் பேருந்தில் கூட்டநெரிசலில் வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் நோய் தொற்று பெருகும் ஆபத்து உள்ளது, என்பதால் பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்றும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.