பள்ளிகள் திறப்பு குறித்து வால்பாறை பள்ளிகளில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.



இதன் காரணமாக பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்து. அதன்படி, இன்று அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.



காலை 9 மணிக்கு, பெற்றோர்கள் பள்ளிகளுக்கு வருமாறு பள்ளி நிர்வாகத்தால் அழைக்கப்பட்டிருந்தது. இதன்படி, பெற்றோர்கள் ஒவ்வொருவராக, அவர்கள பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு வந்தனர். பின்னர், அவர்கள் வகுப்பறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு படிவம் ஒன்று கொடுக்கப்பட்டு பள்ளிகள் திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து வெள்ளைத் தாளில் கருத்துக்களை எழுதிக் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்துகளை ஒன்றிணைத்து இன்றே, கல்வி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும், பள்ளிக்கு வந்து கருத்து தெரிவிக்க முடியாத பெற்றோர்களின் கருத்துக்களை எஸ்எம்எஸ் மூலம் தெரியப்படுத்தலாம்.

இது குறித்து, பெற்றோர்கள் கூறும்போது, குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதில் பிரச்சனை இல்லை, ஆனால் குழந்தைகளுக்கு பள்ளிகளில் என்ன மாதிரியான பாதுகாப்புகள் வழங்கப்படுகிறது, என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...