கோவையில் அழுகிய நிலையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்த ஆண்; கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

கோவை: கோவை அருகே ஆண் ஒருவர் உடலில் காயங்களுடன் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த சம்பவத்தில், போலீசார் உடலை கைப்பற்றி அது கொலையா, இல்லை தற்கொலையா? என்று விசாரித்து வருகின்றனர்.

கோவை: கோவை அருகே ஆண் ஒருவர் உடலில் காயங்களுடன் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த சம்பவத்தில், போலீசார் உடலை கைப்பற்றி அது கொலையா, இல்லை தற்கொலையா? என்று விசாரித்து வருகின்றனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (38), கூலித்தொழிலாளி. இவருக்கு, திருமணம் ஆகாததால் தனியாக வசித்து வந்தார். 

சம்பவத்தன்று, திருப்பதியை அவரது அண்ணன் கணேசன் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அவர் செல் போனை எடுக்கவில்லை. இதனால் அவரது வீட்டுக்கு கணேசன் வந்துள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. 

உடனே, கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, உடலில் காயங்களுடன் கட்டிலில் திருப்பதி இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதன் பேரில், போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, திருப்பதி இறந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார். யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டாரா? என்கின்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...