கோவையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று காலை முதல் துவக்கம்

கோவை: பொதுத் தேர்வு எழுதும் 9, 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடம் நடத்துவது குறித்து பெற்றோரின் கருத்துகேட்புக் கூட்டம் இன்று நடைபெறும், என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.



கோவை: பொதுத் தேர்வு எழுதும் 9, 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடம் நடத்துவது குறித்து பெற்றோரின் கருத்துகேட்புக் கூட்டம் இன்று நடைபெறும், என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. 

அதன்படி, இன்று தமிழகத்தில் 16 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள், 11 மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் உட்பட கோவை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், தலைமையில் இன்று கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இது குறித்து, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா, கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதன்படி, பள்ளி வளாகங்கள் முழுவதும் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்கு வருபவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நுழைவுவாயிலில், தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே, பெற்றோரை பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆலோசனை கூட்டம் நடைபெறும், கூட்ட அரங்கு நுழைவுவாயிலில் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்பு, அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் காலை 10 முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு வகுப்பு என, பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வகுப்பு வாரியாக பெறப்படும் தகவல்களை தலைமையாசிரியர்கள் தொகுத்து, மாலை 6 மணிக்கு முன்பாக முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...