வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களான படகு இல்லம், தாவரவியல் பூங்கா பணிகளை கஸ்தூரி வாசு எம்எல்ஏ நேரில் ஆய்வு!

கோவை: வால்பாறையில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களான படகு இல்லம், தாவரவியல் பூங்கா ஆகிய பணிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆய்வு செய்தார்


கோவை: வால்பாறையில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களான படகு இல்லம், தாவரவியல் பூங்கா ஆகிய பணிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பொருளாதாரத்தை மேம்படுத்த படகு இல்லம், தாவரவியல் பூங்கா போன்ற சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு அவர்களின் முயற்சியால் வால்பாறையில் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.



இந்த நிலையில், இன்று வால்பாறை வந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெறும் இடம் மற்றும் படகு இல்லம் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடம் ஆகி இடங்களை ஆய்வு செய்தார்.



மேலும், நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, வரும் ஆண்டு துவக்கத்திலேயே பணிகள் முடிவுற்று தாவரவியல் பூங்கா படகு இல்லம் செயலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், அதிமுக நகரச் செயலாளர் மயில் கணேசன், வாசு சண்முகம், ஜெபராஜ், பொன் கணேஷ், சலாவுதீன் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...