கோவை: கோவையில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏழை, எளியோருக்கு மற்றும் சுகாதார பணியாளர்கள் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வழங்கினார்.
கோவை: கோவையில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏழை, எளியோருக்கு மற்றும் சுகாதார பணியாளர்கள் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வழங்கினார்.
சமுதாய முன்னேற்றத்துக்காக சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன், எப்போதும் ஒரு தனித்தன்மை வாய்ந்த பிரச்சாரத்துடன், பசுமை திட்டங்களை செய்து வருகிறது. இந்த தொற்று நோய் சூழ்நிலையிலும், தீபாவளியை முன்னிட்டு இன்று புதிய புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
போத்தனுார், வடிவு நகரில் நடந்த இந்த நிகழ்வில், பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும் வழங்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, சந்தின்ஸ் யுவா பவுண்டேஷன் அனைவரையும் அழைத்திருந்தது.
இந்த அருமையான சமுதாய நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஐ.ஏ.எஸ்., மாவட்ட நிர்வாக அதிகாரி டி. ராமதுரை முருகன் விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர்கள் பேசும்போது, ‘ தொற்று இல்லாத, மாசு இல்லாத தீபாவளியை அனைவரும் கொண்டாடுவோம். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வோம்’ என்பதை வலியுறுத்தினர். சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சி. சிவநேசன், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சசிகலா ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ள ஏழை எளிய மக்கள், சுகாதார பணியாளர்கள், குழந்தைகள், அனாதை இல்ல குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த மக்கள் என பயனாளிகளை தேர்வு செய்து, புத்தாடைகளை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் வழங்கியது.

இந்த நிகழ்ச்சி முழுவதும் கோவிட் 19 பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி நடந்தது. கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது. முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பான உறையில் புத்தாடைகள் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஈதலின் இன்பத்தை பெற வேண்டுமானால், சுகாதாரமான சூழலில், பாதுகாப்பாக வழங்க இந்த வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.
மேலும், எஸ்.எஸ்.எஸ்.வி.எம் (SSVM) கல்வி நிறுவனங்கள், தேவையான குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கியது.
சமுதாய முன்னேற்றத்துக்காக சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன், எப்போதும் ஒரு தனித்தன்மை வாய்ந்த பிரச்சாரத்துடன், பசுமை திட்டங்களை செய்து வருகிறது. இந்த தொற்று நோய் சூழ்நிலையிலும், தீபாவளியை முன்னிட்டு இன்று புதிய புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
போத்தனுார், வடிவு நகரில் நடந்த இந்த நிகழ்வில், பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும் வழங்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, சந்தின்ஸ் யுவா பவுண்டேஷன் அனைவரையும் அழைத்திருந்தது.
இந்த அருமையான சமுதாய நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஐ.ஏ.எஸ்., மாவட்ட நிர்வாக அதிகாரி டி. ராமதுரை முருகன் விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர்கள் பேசும்போது, ‘ தொற்று இல்லாத, மாசு இல்லாத தீபாவளியை அனைவரும் கொண்டாடுவோம். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வோம்’ என்பதை வலியுறுத்தினர். சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சி. சிவநேசன், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சசிகலா ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ள ஏழை எளிய மக்கள், சுகாதார பணியாளர்கள், குழந்தைகள், அனாதை இல்ல குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த மக்கள் என பயனாளிகளை தேர்வு செய்து, புத்தாடைகளை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் வழங்கியது.
இந்த நிகழ்ச்சி முழுவதும் கோவிட் 19 பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி நடந்தது. கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது. முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பான உறையில் புத்தாடைகள் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஈதலின் இன்பத்தை பெற வேண்டுமானால், சுகாதாரமான சூழலில், பாதுகாப்பாக வழங்க இந்த வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.
மேலும், எஸ்.எஸ்.எஸ்.வி.எம் (SSVM) கல்வி நிறுவனங்கள், தேவையான குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கியது.