கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. மேலும், மதியம் திடீரென கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, ஆர்.எஸ் புரம், கணபதி, விளாங்குறிச்சி, பீளமேடு, சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மீண்டும் மாலை மழை பெய்ய துவங்கியது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்றும், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நேற்று முன்தினம் அன்னூரில் 12 மில்லி மீட்டர், கோவை விமான நிலையம் பகுதியில் 9.6 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர், சின்கோனா 1 மில்லி மீட்டர், வால்பாறையில் 14 மில்லி மீட்டர், சோலையாறு 10 மில்லி மீட்டர், சூலூரில் 17 மில்லி மீட்டர், பெரியநாயக்கன் பாளையத்தில் 24.2 மில்லி மீட்டர், வேளாண் பல்கலைக்கழகத்தில் 2.4 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 121.3 மில்லி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...