டெங்கு குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், போதுமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - மாநகராட்சி கமிஷனர்

கோவை: கோவையில் டெங்கு மற்றும் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், எனவும் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, என்று மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் டெங்கு மற்றும் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், எனவும் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, என்று மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ‘‘கோவையில் டெங்கு நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு பணிகளில் 2500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போல், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு சுமார் 800 பேர் வரை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்."

மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள், டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடமாட்டார்கள். முக்கிய பகுதிகளில் காலை, மாலை என இரண்டு நேரங்களில் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, கொரோனா மற்றும் டெங்கு தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மாநகராட்சி நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...