கோவை: செம்மர கடத்தல் மன்னன் ஹக்கீம் என்கிற பாஷா பாய் (55), கோவையில் பதுங்கியிருப்பதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், அவரை கோவையில் வைத்து இன்று கைது செய்தனர்.
கோவை: செம்மர கடத்தல் மன்னன் ஹக்கீம் என்கிற பாஷா பாய் (55), கோவையில் பதுங்கியிருப்பதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், அவரை கோவையில் வைத்து இன்று கைது செய்தனர்.
இன்று காலை, ஆந்திரா, கடப்பா போலீஸ் எஸ்.பி அன்புராஜன் தலைமையில் ஒரு தனிப்படை போலீஸார் கோவைக்கு வந்தனர். அவர்கள், கோவை போலீசார் உதவியுடன், சோதனை மேற்கொண்டதில், செம்மர கடத்தல் மன்னன் ஹக்கீம் என்கிற பாஷா பாயை, உக்கடம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஹக்கீம் மீது செம்மரக்கடத்தல் தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அதனால் தொடர்ந்து இவரை தேடி வந்ததாகவும், ஆந்திரா போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோவை மற்றும் தமிழகத்திலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அவர் இருந்துள்ளார்.
செம்மரக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹக்கீமை ஆந்திர போலீசார், அழைத்து சென்றதை தொடர்ந்து, தமிழக போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைக்க, ஆந்திரா சென்று உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை, ஆந்திரா, கடப்பா போலீஸ் எஸ்.பி அன்புராஜன் தலைமையில் ஒரு தனிப்படை போலீஸார் கோவைக்கு வந்தனர். அவர்கள், கோவை போலீசார் உதவியுடன், சோதனை மேற்கொண்டதில், செம்மர கடத்தல் மன்னன் ஹக்கீம் என்கிற பாஷா பாயை, உக்கடம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஹக்கீம் மீது செம்மரக்கடத்தல் தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அதனால் தொடர்ந்து இவரை தேடி வந்ததாகவும், ஆந்திரா போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோவை மற்றும் தமிழகத்திலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அவர் இருந்துள்ளார்.
செம்மரக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹக்கீமை ஆந்திர போலீசார், அழைத்து சென்றதை தொடர்ந்து, தமிழக போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைக்க, ஆந்திரா சென்று உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.