கோவை: கோவையில் வேலைக்கு சென்று திரும்பிய பெண் மர்மமான முறையில், அவரது வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் வேலைக்கு சென்று திரும்பிய பெண் மர்மமான முறையில், அவரது வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவை ஈச்சனாரி அருகே உள்ள சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் சுவேதா (20). இவர் சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு சுவேதா, வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர், அவர் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில், வீட்டில் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள், உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவை ஈச்சனாரி அருகே உள்ள சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் சுவேதா (20). இவர் சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு சுவேதா, வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர், அவர் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில், வீட்டில் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள், உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.