வெற்றிவேல் யாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கக் கோரி கோவையில் வேலுடன் பஜனை பாடல்கள் பாடி பா.ஜ.கவினர் காத்திருப்பு போராட்டம்!

கோவை: வெற்றிவேல் யாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கக் கோரி கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வேலுடன் பஜனை பாடல்கள் பாடி பா.ஜ.கவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: வெற்றிவேல் யாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கக் கோரி கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வேலுடன் பஜனை பாடல்கள் பாடி பா.ஜ.கவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரை திருத்தனியில் இன்று துவங்கி அடுத்த மாதம் 6ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என அக்கட்சி அறிவித்திருந்தது. கொரோனா தொற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதாக இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து உள்ளது.

தமிழக அரசு சில தளர்வுகள் அறிவித்து உள்ள நிலையில், நவம்பர் 16ம் தேதி வரை 100 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் நாளை நடைபெறும் பேரணிக்கு சட்டரீதியாக அனுமதி அளிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் கூறினார்.



இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் முருகன் தலைமையில் துவங்கும் வெற்றி வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.



இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்திய நிலையில், இன்று காலை மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் ஏழு வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர் சேகர், இந்து முன்னணி மாநில பேச்சாளர் முகாம்பிகை மணி தலைமையில் பா.ஜ.கவினர் 12 அடி வேலுடன் முருகன் பாடல்களை பாடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



பெண்கள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகம் முன் குவிந்துள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து, முருக பெருமான் பாடல்களை பாடி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...