கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.34 லட்சம் அபராதம் வசூல்

Coimbatore: கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.34 லட்சம் அபராதம் வசூல்



கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் இருந்து இதுவரை ரூ.34 லட்சத்து 9 ஆயிரத்து 252 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் என கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து மாநகராட்சி சார்பாக அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இதன்படி, முக கவசம் அணிய வில்லை என்றால் ரூ.200, சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 என அபராதம் விதிக்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 104 பொதுமக்களிடம் இருந்து 1 லட்சத்து 52 ஆயிரத்து 235 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே போல், வியாபாரிகளிடமிருந்து ரூ.32 லட்சத்து 57 ஆயிரத்து 17 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் இதுவரை ரூ.34 லட்சத்து 9 ஆயிரத்து 252 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது."

மேலும், பொதுமக்கள் முக கவசம் அணிவதுடன் அரசு கூறியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், என்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...