கோவை சிங்காநல்லூரில் நள்ளிரவில் துணிகரம்; கோபுர கலசத்தை திருட முயன்ற கொள்ளையர்கள்

கோவை: கோவை சிங்காநல்லூரில் நள்ளிரவில், கோபுர கலசத்தை திருட முயன்ற கொள்ளையர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூரில் நள்ளிரவில், கோபுர கலசத்தை திருட முயன்ற கொள்ளையர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர், வெள்ளலூர் ரோடு பகுதியில், ஒரு விநாயகர் கோயில் உள்ளது. நேற்று இரவு சிங்காநல்லூர், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது, கோவிலில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, கோயில் கோபுரத்தில் இருந்து 2 வாலிபர்கள் இறங்குவதை பார்த்துள்ளனர்.

உடனே, உஷாரான போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மர்ம நபர்கள் கோவில் கலசத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடி விட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து, போலீசார், திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். போலீசார் ரோந்து சென்றதால் கோபுர கலசம் தப்பியது, என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...