திருப்பூர்: வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி எதிரே மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி எதிரே மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரக்கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் இழந்து உள்ள சூழ்நிலையில், தற்போது பண்டிகைக்கான பொருட்களை வாங்க முடியாத அளவு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் காய்கனிகளை மாலையாக அணிந்தும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரக்கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் இழந்து உள்ள சூழ்நிலையில், தற்போது பண்டிகைக்கான பொருட்களை வாங்க முடியாத அளவு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் காய்கனிகளை மாலையாக அணிந்தும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.