கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கோவை மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கோவை மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மேம்பாலத்தின் கீழ் பகுதிகள் சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது. இதில் டெங்கு கொசுக்கள் உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, டெங்கு தடுப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவையில் டெங்கு நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து கொசுக்களை அழிக்கும் பணிகளை தீவிரப்படுத்த கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, முக்கிய பகுதிகளில் காலை, மாலை என இரண்டு நேரங்களில் புகை அடிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள் மக்கள் அனுமதிக்க மறுப்பதால் வெளிப் பகுதிகளில் மட்டும் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டு அளிக்கப்படுகிறது.
மேலும், தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மேம்பாலத்தின் கீழ் பகுதிகள் சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது. இதில் டெங்கு கொசுக்கள் உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, டெங்கு தடுப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவையில் டெங்கு நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து கொசுக்களை அழிக்கும் பணிகளை தீவிரப்படுத்த கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, முக்கிய பகுதிகளில் காலை, மாலை என இரண்டு நேரங்களில் புகை அடிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள் மக்கள் அனுமதிக்க மறுப்பதால் வெளிப் பகுதிகளில் மட்டும் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டு அளிக்கப்படுகிறது.
மேலும், தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.