கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு ஊழியர் காலனி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை, மாநகராட்சி ஆணையர், குமரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு ஊழியர் காலனி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை, மாநகராட்சி ஆணையர், குமரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அப்பகுதியில் பழுதடைந்த தண்ணீர் குழாய் இணைப்புகளை சரி செய்யும் பணிகள் மற்றும் சாலை ஓரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி, குடிநீர் பணிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் போன்றவை ஆய்வின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குறிப்பாக, குடிநீர் சம்பந்தபட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, 90-வது வார்டு கோவைப்புதூரில் நடந்து வரும், வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட, ஆணையர், அங்குள்ள பொது மக்களிடம் குடிநீர் சீராக கிடைக்கப்பெறுகிறதா? தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவது குறித்து கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, செயற் பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி, மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பின்னர், அப்பகுதியில் பழுதடைந்த தண்ணீர் குழாய் இணைப்புகளை சரி செய்யும் பணிகள் மற்றும் சாலை ஓரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி, குடிநீர் பணிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் போன்றவை ஆய்வின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குறிப்பாக, குடிநீர் சம்பந்தபட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, 90-வது வார்டு கோவைப்புதூரில் நடந்து வரும், வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட, ஆணையர், அங்குள்ள பொது மக்களிடம் குடிநீர் சீராக கிடைக்கப்பெறுகிறதா? தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவது குறித்து கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, செயற் பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி, மற்றும் பலர் உடன் இருந்தனர்.