கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயில் மீது கும்பல் கல் வீச்சு; போலீசார் விசாரணை

கோவை: கோவையில் நேற்று நள்ளிரவில் ரயில் மீது கல் வீசி தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: கோவையில் நேற்று நள்ளிரவில் ரயில் மீது கல் வீசி தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னையில் இருந்து கோவை நோக்கி நேற்று முன்தினம் இரவு இன்டர்சிட்டி ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, வட கோவைக்கு முன்பாக ரயில் வந்தபோது, மர்ம கும்பல் ஒன்று ரயில் பெட்டிகளின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. இதில் குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டியில் கண்ணாடிகள் உடைந்து சிதறியது. 

சம்பவத்தால், பதறி போன பயணிகள் இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். கல்வீச்சில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

இரவு நேரத்தில் ரயில் பாதையில் மது அருந்திவிட்டு சுற்றித்திரியும் கும்பல் யாரேனும் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இது போன்ற கும்பல்கள், தண்டவாளத்தில் கிடக்கும் ஜல்லி கற்களை எடுத்து வீசி திடீரென தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த மர்ம கும்பலை இரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...