கோவை - கேரளா எல்லையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது - 63 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவை - கேரளா எல்லையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த கேரள போலீசார் 63 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை - கேரளா எல்லையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த கேரள போலீசார் 63 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கேரள எல்லைப்பகுதியான வாளையார் பகுதியில் இன்று மதியம் கேரள போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அதன் வழியாக ஜெய் ஸ்ரீராம் என எழுதப்பட்ட ஒரு ஆட்டோ அதிவேகமாக வந்தது. அதனை பார்த்த கேரள போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முயன்றனர்.

ஆனால், போலீசார் தடுப்பதை தெரிந்ததும் உடனடியாக ஆட்டோவை நிறுத்தாமல் மிக வேகமாக சென்றனர்.



இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

அப்போது, அந்த ஆட்டோவில் இரண்டு மூட்டைகள் இருந்தன. அதை சோதனையிட்ட போது அதில் 63 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த தமிழ்நாடு தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன், காதர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கேசவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஆட்டோ பறிமுதல் செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...