கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் போஸ்டர்களை தீ வைத்து எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் போஸ்டர்களை தீ வைத்து எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரம்மி, டிரீம் லெவன் போன்ற ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூகநீதி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விளையாட்டுகளை தடை செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தின் நடுவே போஸ்டர்களை தீ வைக்க முயன்றனர். இதனை போலீசார் தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சமூகநீதி கட்சி தலைவர் பன்னீர் கூறுகையில், தமிழகத்தில் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணத்தை இழந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல நடிகர், நடிகைகளின் ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து மக்கள் ஏமாறுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், தொழில் சட்டத்தின் கீழ் இந்த ஆன்லைன் சூதாட்டம் வராத காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் யார் என கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தனி சட்டத்தை தமிழக அரசு இயற்றிட வேண்டும் எனவும் இதனை கண்காணிக்க சைபர் கிரைம் (Cyber Crime) காவலர்களுக்கு தனி பயிற்சி அளித்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
ரம்மி, டிரீம் லெவன் போன்ற ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூகநீதி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விளையாட்டுகளை தடை செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் நடுவே போஸ்டர்களை தீ வைக்க முயன்றனர். இதனை போலீசார் தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சமூகநீதி கட்சி தலைவர் பன்னீர் கூறுகையில், தமிழகத்தில் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணத்தை இழந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல நடிகர், நடிகைகளின் ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து மக்கள் ஏமாறுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், தொழில் சட்டத்தின் கீழ் இந்த ஆன்லைன் சூதாட்டம் வராத காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் யார் என கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தனி சட்டத்தை தமிழக அரசு இயற்றிட வேண்டும் எனவும் இதனை கண்காணிக்க சைபர் கிரைம் (Cyber Crime) காவலர்களுக்கு தனி பயிற்சி அளித்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.