கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நீதிபதி அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நீதிபதி அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என மக்கள் பணியாற்ற கூடியவர்களிடம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக நீதிபதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட முன்னாள் தலைமை குற்றவியல் நடுவரும் தற்போது தேனி மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். இவர் பெயர் முகம்மது ஜியாவுதீன். இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, சளி தொந்தரவு இருந்து வந்தது.
இந்த நிலையில், பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய மனைவி பெயர் புவனேஸ்வரி அவரும் மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என மக்கள் பணியாற்ற கூடியவர்களிடம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக நீதிபதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட முன்னாள் தலைமை குற்றவியல் நடுவரும் தற்போது தேனி மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். இவர் பெயர் முகம்மது ஜியாவுதீன். இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, சளி தொந்தரவு இருந்து வந்தது.
இந்த நிலையில், பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய மனைவி பெயர் புவனேஸ்வரி அவரும் மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.