கோவை: வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தமிழக கேரளா எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை: வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தமிழக கேரளா எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

கேரள எல்லையான வயநாடு பகுதியில் கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும் மாவோயிஸ்ட்டுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கூடலூர், பந்தலூர் தாலுகா நுழையாமல் தடுக்க கூடலூர் அருகே உள்ள தமிழக-கேரள எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், கூடலூர் நாடுகாணி, பாட்டவயல் சோலார் உட்பட 11 சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, நியூ ஹோப், தேவாலா, நிலக்கோட்டை, தேவர்சோலை, சேரம்பாடி, மசினகுடி என அனைத்து போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.
மேலும், எல்லையில் உள்ள மருத்துவமனைகளில் குண்டு காயங்களுடன் யாராவது அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று எல்லையில் இருக்கும் கிராமங்களில் குண்டு காயங்களுடன் யாராவது வந்தார்களா என்பது குறித்தும் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் சந்தேகத்திற்கு இடமாக யாராவது நடமாடுகிறார்கள் என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரள எல்லையான வயநாடு பகுதியில் கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும் மாவோயிஸ்ட்டுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கூடலூர், பந்தலூர் தாலுகா நுழையாமல் தடுக்க கூடலூர் அருகே உள்ள தமிழக-கேரள எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், கூடலூர் நாடுகாணி, பாட்டவயல் சோலார் உட்பட 11 சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, நியூ ஹோப், தேவாலா, நிலக்கோட்டை, தேவர்சோலை, சேரம்பாடி, மசினகுடி என அனைத்து போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.
மேலும், எல்லையில் உள்ள மருத்துவமனைகளில் குண்டு காயங்களுடன் யாராவது அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று எல்லையில் இருக்கும் கிராமங்களில் குண்டு காயங்களுடன் யாராவது வந்தார்களா என்பது குறித்தும் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் சந்தேகத்திற்கு இடமாக யாராவது நடமாடுகிறார்கள் என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.