காதல் ஜோடிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம்; பெற்றோர் மிரட்டுவதாக புகார்

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் சமூக சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தேனியைச் சேர்ந்த காதல் ஜோடிகள், காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். மேலும், மணமகனின் பெற்றோர் மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தனர்.



கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் சமூக சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தேனியைச் சேர்ந்த காதல் ஜோடிகள், காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். மேலும், மணமகனின் பெற்றோர் மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்சக்தி (26), பிரியதர்ஷினி (23) காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இன்று அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

மணமகளின் பெற்றோர்கள், அவர்கள் மகளை கடத்தி விட்டதாக, தேனியில் அளித்த புகாரின் பெயரில் நடத்திய விசாரணையில், இருவரும் கோவையில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, மணமகனின் பெற்றோரை பிடித்து வைத்து, மணமகளின் பெற்றோர்கள் மிரட்டுவதாக மணமகனுக்கு தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து, திருமணம் செய்தவுடன் இருவரும் நேராக, மாநகர போலீஸ் ஆணையரின் அலுவலகத்திற்கு வந்தனர். தம்பதிகள், அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், பெண்வீட்டார் விடுத்த மிரட்டலை குறித்தும் மனு அளித்தனர். புகாரை பெற்று கொண்ட ஆணையர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...