கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்..! மேலும் ஒரு வாலிபர் தற்கொலை!

கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் மதன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ஆன்லைன் விளையாட்டு பிரியர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு வாலிபர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை போத்தனூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (32), தனியார் நிறுவன ஊழியர். பெற்றோரை இழந்த இவர் திருமணம் ஆகாத நிலையில், உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், ஜெயச்சந்திரன் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதைப் பழக்கமாக கொண்டுள்ளார். இதனால் சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்தில் இழந்தார். இதனால் கடன் தொல்லைக்கு ஆளானார். சூதாட்டத்தில் பணம் இழப்பு மற்றும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஜெயச்சந்திரன், விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குனியமுத்தூர் பகுதி பொதுமக்கள் கூறும்பொழுது :- என்னங்க இது நியாயமா, வீட்ல தெருக்களில் சீட்டு விளையாண்டா போலீஸ் வந்து புடிச்சிட்டு போயிடறாங்க. ஆனால், செல்போன் மூலமாக ஆன்லைனில் அரசாங்கமே ரம்மி விளையாட அனுமதிக்கிறது. அதில் கோவையில் தொடர்ந்து தற்கொலை நடைபெற்று வருகிறது. உடனடியாக ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும். உரிய அரசு மற்றும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...