கோவையில் போலீஸ்காரரின் தாயாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்!

கோவை: கோவையில் போலீஸ்காரரின் தாயாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் போலீஸ்காரரின் தாயாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகம் பி.ஆர்.எஸில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம் மாலையில் இராஜேந்திரனின் தாயார் கனகம் (70), நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, பின்னால் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர போலீஸ் ஆணையரிடம் டிரைவராக பணிபுரிந்து வரும் ஆயுதப்படை போலீஸ்காரரின் 70 வயது தாயாரிடம் மர்ம ஆசாமி ஒருவர் 10 பவுன் நகையை பறித்து விட்டு தப்பினார். 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ள போலீஸ் குடியிருப்பில் நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...