கோவையில் தீபாவளி கொண்டாட முடியாத விரக்தியில் விஷம் குடித்து ஜோதிடர் தற்கொலை - போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத விரக்தியில் ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத விரக்தியில் ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவையை அடுத்த போத்தனூர் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48), ஜோதிடராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி வசந்தி (45), இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக சிவகுமார் வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தார். மேலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் புத்தாடை எடுத்துக் கொடுக்க பணமின்றி விரக்தியில் காணப்பட்டார்.

இந்த நிலையில், சுகுமார் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று தீபாவளி செலவுக்கு கடன் கேட்டார். ஆனால் கடன் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பிய அவர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார்.

தொடர்ந்து வீட்டில் இருந்த அவர் திடீரென விஷம் குடித்து மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி செலவுக்கு பணம் இல்லாத விரக்தியில் ஜோதிடர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...