கோவையில் ஐம்பொன் சிலையின் உடைந்த பாகத்தை விற்க முயன்ற இருவர் கைது; ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்

கோவை: கோவையில் சிலை கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் சிலை கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, இடையர் வீதி சந்திப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் நின்று கொண்டிருந்தனர். மேலும், போலீசை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து, உடனே அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும், ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.



பின்னர், அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது, அதில் சிறிய அளவிலான சிலை ஒன்று இருந்தது. சிலை குறித்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சலிவன் வீதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் ஜெயச்சந்திரன் மோகன், பேரூர் அமுல் நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் வெங்கடேஷ் என்பதும், தப்பிச் சென்றது திருநாவுக்கரசு என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பித்துச் சென்ற திருநாவுக்கரசை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...