வாகன ஓட்டிகளே எச்சரிக்கை..! கோவையில் நவீன தொழில்நுட்ப கேமரா மூலமாக சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை!

கோவை: கோவையில் நவீன தொழில்நுட்ப கேமரா மூலமாக சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவையில் நவீன தொழில்நுட்ப கேமரா மூலமாக சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மற்றும் கோவை புறநகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் மற்றும் சிக்னல்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், தொடர்ந்து சாலை பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தி வருகின்றன. இந்த கேமராக்கள் சிறப்பு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை. 100 மீட்டர் வரை மோட்டார் சைக்கிளில் செல்லக் கூடியவர்கள் சாலை விதிகளை மீறி சென்றாலோ ஹெல்மெட் அணியாமல் சென்றால் முக கவசம் அணியாமல் சென்றால் உடனடியாக படமெடுத்து வாகன எண்ணின் முகவரிக்கு எஃப் ஐ ஆர் மற்றும் அதற்கான அபராத தொகையுடன் கூடிய ரசீது அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று சாலையில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணிற்கு சாலை விதிமீறல் மற்றும் ஹெல்மெட் அணியாததற்காக நவீன தொழில்நுட்ப கேமரா பதிவு செய்த அறிக்கை மூலமாக அவருக்கு அபராதம் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், தொடர்ந்து கேமரா கோவையில் உள்ள அனைத்து சாலைகளிலும் பொருத்தப்பட்டு வருகிறது. இவை அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை உடனடியாக வாகனத்தை புகைப்படமெடுத்து போலீசார் கண்ட்ரோல் ரூம்க்கு அது அனுப்பிவிடும்.

பின்னர், உடனடியாக அங்கிருந்து அவருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலமாக வாகன சட்டத்தின்படி அவர்களுக்கான அரசு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை பதிவு செய்து நேரடியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டு அவரிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்படும்.

ஆகவே, மக்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து முகக் கவசம், ஹெல்மெட், கையுறை போன்றவை அணிந்து செல்ல வேண்டும். இதன் மூலமாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த தொழில்நுட்ப கேமரா செயல்பாடுகள் அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...