கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் விமான சேவை ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் விமான சேவை ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் நோய்தொற்று பாதிப்புக்கு பின் ஊரங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் உள்நாட்டு விமான சேவை பல்வேறு நகரங்களுக்கு அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இருப்பினும் தினமும் விமான பணி ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி உள்ளது. இது பயணிகளை கடுமையாக பாதித்துள்ளது.
இது குறித்து கொங்கு குளோபல் போரம்(KGF), இயக்குனர், டி. நந்தகுமார் கூறியதாவது:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்து துவங்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் விமான சேவை ரத்து என்பது தினமும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக விமான சேவை ரத்து செய்யப்படுவதால், உதாரணத்துக்கு டெல்லியில் இருந்து கோவை வரவேண்டிய பயணி பெங்களூர் அல்லது சென்னை அல்லது அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டு பின்பு கோவை வந்தடையும் அவலநிலை உள்ளது. இதனால் பல மணி நேரம் வீணாவது மட்டுமன்றி தேவையில்லாமல் பல நகரங்களின் விமானநிலையத்துக்குச் சென்று அங்கு காத்திருக்கும் சூழல் உள்ளதால் 'கொரோனா' நோய் தொற்று பாதிப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது விமானங்களை இயக்க ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் எத்தகைய சிரமம் சந்திக்க வேண்டும் என்பது எங்களுக்கு புரிகிறது. இருப்பினும், நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து தற்போது தான் அனைத்து துறையும் மெல்ல மீண்டு வர துவங்கி உள்ளது.
எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த காலகட்டத்தை சேவை காலமாக கருதி குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் விமானங்களை ரத்து செய்யாமல் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "ஆம், கோவை விமான நிலையத்தில் தினமும் ஒன்று அல்லது இரண்டு விமான சேவை ரத்து செய்யப்படுவது உண்மைதான். இருப்பினும் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்காத வகையில் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றன." என்று தெரிவித்தார்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் நோய்தொற்று பாதிப்புக்கு பின் ஊரங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் உள்நாட்டு விமான சேவை பல்வேறு நகரங்களுக்கு அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இருப்பினும் தினமும் விமான பணி ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி உள்ளது. இது பயணிகளை கடுமையாக பாதித்துள்ளது.
இது குறித்து கொங்கு குளோபல் போரம்(KGF), இயக்குனர், டி. நந்தகுமார் கூறியதாவது:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்து துவங்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் விமான சேவை ரத்து என்பது தினமும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக விமான சேவை ரத்து செய்யப்படுவதால், உதாரணத்துக்கு டெல்லியில் இருந்து கோவை வரவேண்டிய பயணி பெங்களூர் அல்லது சென்னை அல்லது அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டு பின்பு கோவை வந்தடையும் அவலநிலை உள்ளது. இதனால் பல மணி நேரம் வீணாவது மட்டுமன்றி தேவையில்லாமல் பல நகரங்களின் விமானநிலையத்துக்குச் சென்று அங்கு காத்திருக்கும் சூழல் உள்ளதால் 'கொரோனா' நோய் தொற்று பாதிப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது விமானங்களை இயக்க ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் எத்தகைய சிரமம் சந்திக்க வேண்டும் என்பது எங்களுக்கு புரிகிறது. இருப்பினும், நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து தற்போது தான் அனைத்து துறையும் மெல்ல மீண்டு வர துவங்கி உள்ளது.
எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த காலகட்டத்தை சேவை காலமாக கருதி குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் விமானங்களை ரத்து செய்யாமல் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "ஆம், கோவை விமான நிலையத்தில் தினமும் ஒன்று அல்லது இரண்டு விமான சேவை ரத்து செய்யப்படுவது உண்மைதான். இருப்பினும் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்காத வகையில் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றன." என்று தெரிவித்தார்.