நீலகிரி: பந்தலூர் தாலுக்கா, பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலை பகுதியில், தனியார் தோட்ட மேலாளர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி கருகி இறந்து கிடந்துள்ளது.
நீலகிரி: பந்தலூர் தாலுக்கா, பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலை பகுதியில், தனியார் தோட்ட மேலாளர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு காட்டு யானை மின்சாரம் தாக்கி கருகி இறந்து கிடந்துள்ளது.
இது குறித்து பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, கூடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஸ் சோமன், உதவி வன பாதுகாவலர், விஜயன் வனச்சரகர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
மேலும், முதுமலை கால் நடை மருத்துவர் ராஜேஸ் குமார், பிரேத பரிசோதனையை நடத்தினார். அப்போது, யானை இறந்து கிடந்த இடத்தில் மின் கம்பி இன்று அறுந்து கிடந்தது தெரியவந்தது. அங்கு இருந்த பாக்கு மர மட்டைகளை யானை உண்ண இழுத்த போது, கம்பி அறுந்து யானையை மின்சாரம் தாக்கி இருக்கலாம் இன்று கூறப்படுகிறது.
இறந்த யானை 15 வயதுடைய ஆண் யானை என்றும் மின்சாரம் தாக்கி தீயில் கருகி இறந்தது தெரிய வந்ததுள்ளது. பிரேத பரிசோதனைக்குப், பிறகு அதேப் பகுதியில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.