கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கோவை: கோவையில் கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கல்லறை திருநாள் வருடந்தோறும் நவம்பர் 2ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. மரணமடைந்த ஆன்மாக்களுக்கு சகல ஆத்மாக்களின் திருநாள் என ஒவ்வொரு ஆண்டும் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மரணமடைந்தவர்களின் உறவினர்கள் கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாளை பெரும்பாலானோர் நேற்று அனுசரித்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் வரும் நாட்களில் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு திருச்சபையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கல்லறை திருநாளையொட்டி கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை செய்ய வந்தவர்களை நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கல்லறை திருநாளையொட்டி கல்லறைகளை கழுவி பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபங்கள் செய்து கிறிஸ்தவ பாடல்களைப் பாடி அமைதியாக பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.
கல்லறை திருநாள் வருடந்தோறும் நவம்பர் 2ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. மரணமடைந்த ஆன்மாக்களுக்கு சகல ஆத்மாக்களின் திருநாள் என ஒவ்வொரு ஆண்டும் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மரணமடைந்தவர்களின் உறவினர்கள் கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாளை பெரும்பாலானோர் நேற்று அனுசரித்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் வரும் நாட்களில் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு திருச்சபையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கல்லறை திருநாளையொட்டி கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை செய்ய வந்தவர்களை நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கல்லறை திருநாளையொட்டி கல்லறைகளை கழுவி பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபங்கள் செய்து கிறிஸ்தவ பாடல்களைப் பாடி அமைதியாக பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.