கோவையில் இருவேறு சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலி..!

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை இரு வேறு சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக இறந்தனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை இரு வேறு சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக இறந்தனர். 

கோவை அருகே உள்ள சிறுமுகை, போகலூர் பகுதியில் வசிப்பவர் பொன்னுச்சாமி (63) இவர் விவசாயக் கூலியாக உள்ளார். நேற்று மாலை, மோட்டார்சைக்கிளில் உரம் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு போகபூர் பிரிவு அருகே, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

அக்கம்பக்கத்தினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

அதேபோல, மற்றொரு சாலை விபத்தில், கோவை அருகே உள்ள அன்னூர் மன்னீஸ்வரர் தருமர் கோயில் தெரு பகுதியில் வசிப்பவர்டேவிட் (40) நேற்று நண்பர்களைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அன்னூர் சாலையில் எதிரே வந்த கார் அவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அங்குள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், டேவிட் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

விபத்து குறித்து, அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...