கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை இரு வேறு சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக இறந்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை இரு வேறு சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக இறந்தனர்.
கோவை அருகே உள்ள சிறுமுகை, போகலூர் பகுதியில் வசிப்பவர் பொன்னுச்சாமி (63) இவர் விவசாயக் கூலியாக உள்ளார். நேற்று மாலை, மோட்டார்சைக்கிளில் உரம் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு போகபூர் பிரிவு அருகே, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோல, மற்றொரு சாலை விபத்தில், கோவை அருகே உள்ள அன்னூர் மன்னீஸ்வரர் தருமர் கோயில் தெரு பகுதியில் வசிப்பவர்டேவிட் (40) நேற்று நண்பர்களைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அன்னூர் சாலையில் எதிரே வந்த கார் அவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அங்குள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், டேவிட் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து, அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அருகே உள்ள சிறுமுகை, போகலூர் பகுதியில் வசிப்பவர் பொன்னுச்சாமி (63) இவர் விவசாயக் கூலியாக உள்ளார். நேற்று மாலை, மோட்டார்சைக்கிளில் உரம் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு போகபூர் பிரிவு அருகே, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோல, மற்றொரு சாலை விபத்தில், கோவை அருகே உள்ள அன்னூர் மன்னீஸ்வரர் தருமர் கோயில் தெரு பகுதியில் வசிப்பவர்டேவிட் (40) நேற்று நண்பர்களைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அன்னூர் சாலையில் எதிரே வந்த கார் அவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அங்குள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், டேவிட் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து, அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.