கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் 'ஆணையமாக' மாற்றம்: நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடும் அதிகாரம் ரூபாய் 20 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக அதிகரிப்பு..!

கோவை: திருத்தப்பட்ட சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் 'ஆணையமாக' மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்ட நுகர்வோர் ஆணையத்திற்கு நஷ்ட ஈடு வழங்கும் அதிகாரம், ரூபாய் 30 லட்சதிலிருந்து ஒரு கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



கோவை: திருத்தப்பட்ட சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் 'ஆணையமாக' மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்ட நுகர்வோர் ஆணையத்திற்கு நஷ்ட ஈடு வழங்கும் அதிகாரம், ரூபாய் 30 லட்சதிலிருந்து ஒரு கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு தலைவர் ( நீதிபதி), இரண்டு உறுப்பினர்கள் மற்றும் 10 ஊழியர்கள் கொண்டு கட்டமைப்புடன், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன், ஒரு மாதத்துக்கு சராசரியாக 30 வழக்குகள் பதிவு அங்கு செய்யப்படும். ஒரு மாதத்தில் 30 பதிலிறந்து 40 வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்படும். 

கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் 'ஆணையமாக' மாற்றம்

தற்போது வழக்கமான கோர்ட் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வாதாடுதல் முடிந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட், 'ஆணையமாக' மாற்றப்பட்டுள்ளது. 

இதனால் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடும் அதிகாரம் ரூபாய் 20 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நுகர்வோர் கோர்ட் வட்டாரங்கள் கூறுகையில், "திருத்தப்பட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சட்டம் 2019' அமல்படுத்தப்பட்ட காரணத்தால், ஜூலை 25 முதல் கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் 'ஆணையம்' ௭ன மாற்றப்பட்டுள்ளது. இதுவரை, அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை மட்டுமே நஷ்ட ஈடு வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இனிமேல் ஒரு கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது."

"முன்பு பாதிக்கப்பட்ட நுகர்வோர் எந்த மாவட்டத்தில் சம்பவம் நடந்ததோ அந்த மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் தான் வழக்கு தொடுக்க முடியும் என இருந்தது. இந்த சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இனிமேல் நுகர்வோர் எந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்." இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...