கோவை: கோவை அவிநாசி சாலை குப்புசாமி நாயுடு மருத்துவமனை சிக்னல் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு நேற்று இரவு 11:30 மணியளவில் தனியார் டாக்ஸி வாகனம் ஒன்று டீசல் அடிக்க வந்துள்ளது. பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியபோது, காரின் முன்புறம் புகை வெளிவந்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் டீசல் அடிக்காமல் காரை பெட்ரோல் பங்கில் இருந்து எடுத்து செல்லும் படி ஓட்டுனரிடம் கூறியுள்ளனர்.
கோவை: கோவை அவிநாசி சாலை குப்புசாமி நாயுடு மருத்துவமனை சிக்னல் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு நேற்று இரவு 11:30 மணியளவில் தனியார் டாக்ஸி வாகனம் ஒன்று டீசல் அடிக்க வந்துள்ளது. பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியபோது, காரின் முன்புறம் புகை வெளிவந்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் டீசல் அடிக்காமல் காரை பெட்ரோல் பங்கில் இருந்து எடுத்து செல்லும் படி ஓட்டுனரிடம் கூறியுள்ளனர்.

அதனையடுத்து, பெட்ரோல் பங்கை விட்டு சிறிது தூரம் தள்ளி காரை நிறுத்தி விட்டு காரின் ஓட்டுநர் காரின் முன்புறம் , உள்ள பேனட்டை திறந்து பார்த்த போது தீ பொறி வெளிவந்து மளமளவென எறிய துவங்கியது.

இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பங்கில் இருக்கும் தீயணைப்பு சாதனங்களை கொண்டு, தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ கட்டுப்பாட்டிற்கு வராமல் அதிகமானதால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக, அந்த வழியாக வந்த வாகனங்களை சாலை காவல்துறையினர் வேற்று பாதை வழியாக திருப்பி விட்டனர். காரை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அழகர் என்பதும் கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் தற்பொழுது குடியிருப்பதும் தெரியவந்தது
மேலும் காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து, பெட்ரோல் பங்கை விட்டு சிறிது தூரம் தள்ளி காரை நிறுத்தி விட்டு காரின் ஓட்டுநர் காரின் முன்புறம் , உள்ள பேனட்டை திறந்து பார்த்த போது தீ பொறி வெளிவந்து மளமளவென எறிய துவங்கியது.

இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பங்கில் இருக்கும் தீயணைப்பு சாதனங்களை கொண்டு, தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ கட்டுப்பாட்டிற்கு வராமல் அதிகமானதால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக, அந்த வழியாக வந்த வாகனங்களை சாலை காவல்துறையினர் வேற்று பாதை வழியாக திருப்பி விட்டனர். காரை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அழகர் என்பதும் கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் தற்பொழுது குடியிருப்பதும் தெரியவந்தது
மேலும் காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.