கொரோனா விதிமுறைகளை மீறியதாக 2 ஜவுளி கடைகளுக்கு 3 லட்சம் அபராதம்

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கணபதி சில்க்ஸ் கடைக்கு ரூ. 2 லட்சம் மற்றும் சரவணா ஸ்டோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.



கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கணபதி சில்க்ஸ் கடைக்கு ரூ. 2 லட்சம் மற்றும் சரவணா ஸ்டோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.

கோவை டவுன்ஹால், ஒப்பனக்கார வீதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் தற்போது கடைவீதிகளில் ஷாப்பிங் செய்ய குவிந்து வருகின்றனர்.

இதனால், மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளில் அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது, கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்கின்றனர்.



மேலும், கொரோனா விதிமுறைகளை மீறி அதிகளவில் கூட்டமாக இருக்கும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றனர். 



அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத 2 தனியார் ஜவுளிக்கடைகளுக்கு 3 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் கடைவீதிகளில் அதிகளவில் கூடுகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. இதனை தடுக்க, கடைகளில் அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.

மேலும், விதிமுறைகளை மீறும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடத்தப்படும். எனவே, வணிகர்கள் அரசு கூறும் அறிவுறுரைகளை முறையாக பின்பற்ற வேண்டும்" என்றனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...